காதலனை ஆள் வைத்து மிரட்டிய பெண்.
இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.வெகு நாட்கள் பழகிய பிறகு அவன் காதலிப்பதாக சொன்னான்.அது தெரிந்த விஷயம்தான்.பெண் பதில் எதுவும் சொல்லவில்லை.நன்றாகவே பேசிக் கொண்டிருந்தார்.ஒரு நாள் ஊருக்குச் செல்வதாக கூறி சென்றுவிட்டார்.
அடுத்த நாள் பையனுக்கு ஒரு போன் வந்த்து.அந்த பெண்ணுக்கு உறவினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.” அவனே,இவனே! யாரென்று நினைத்தாய்? உன்னை ஒழித்து விடுவோம் என்பதில் ஆரம்பித்து வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார்.பையனுக்கு குழப்பம்.நன்றாகத்தானே பேசிவிட்டு போனார்.? அப் பெண்ணுக்கு போன் செய்து பார்த்தார்.எடுத்த்து பெண் அல்ல! திட்டிய ஆசாமி.
பையன் ரொம்பவும் குழம்பிப் போய்விட்டான்.சில நாட்களில் வேலைக்கு திரும்பி வந்தார் பெண்.ஆர்வமாக போய் விசாரிக்கவே “ நீங்கள் அனுப்பிய மெசேஜை வீட்டில் பார்த்து விட்டார்கள் என்று பதில் வந்த்து.அப்புறம் பையன் படபடக்க ஆரம்பித்து தன்னை உறுதிப்படுத்தி சில நாட்களிலேயே பதிவுத் திருமணம் ஆகி விட்ட்து.
அந்த பெண்ணிற்காக பையனை மிரட்டியவர் எனக்கு தெரிந்தவர்.என்னிடம் கேட்டார்,” எனக்கு பிடிக்கவேயில்லை,கொஞ்சம் மிரட்டுங்க சார்” என்று அப்பெண் கூறியதால் மிரட்டி வைத்தேன் சார்!.சில நாட்களில் அவனுடனே திருமணம் ஆகி விட்ட்து!”’’’’’” எதற்காக என்னிடம் அப்படி பேச சொல்லவேண்டும்? அது அப்படித்தான் என்றேன்.
அவன் பெண்ணின் நம்பிக்கையை போதுமான அளவுக்கு பெறவில்லை.ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும்.பெரும்பாலான காதலிகளுக்கும் அன்ன ஆகாரம் இல்லாமல் தனக்காக காதலன் தெருமுனையில் காத்திருக்க வேண்டும்.சிலருக்கு பரிசுப் பொருள்.சிலருக்கு தினமும் இருபது முறை போன்.
தனது வீட்டு ஆட்கள் மீது பயம் வர வேண்டும்.அதன் மூலம் உடனே திருமணத்திற்கான ஏற்பாடுகளை காதலன் செய்ய வேண்டும் என்பதுதான் அப்பெண்ணின் நோக்கம்.பெற்றோர்,வீட்டு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது,கொஞ்சம் பயம் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.
காதலன்,காதலி என்றில்லாமல் பல உறவுகளுக்கும் நம்முடைய அன்பை சரியாக வெளிப்படுத்துவதில்லை.ஒரே மகனை வெளியூருக்கு வேலைக்கு அனுப்பி விட்டு ஒரு போன் கூட செய்வதில்லை என்று சங்கடப்படும் பெற்றோர் பலர் இருக்கிறார்கள்.மகன் அன்பில்லாமல் இல்லை! சூழ்நிலையால் அதிகம் பேச முடியாமல் போயிருக்கும்.என்னால் இந்த நேரத்தில்தான் பேச முடியும்,தவறாக நினைக்க வேண்டாம் அம்மா,அப்பா என்று சொல்லிவிட்டால் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.புலம்ப மாட்டார்கள்.
மனதில் இருக்கும் அன்பை வெளிப்படுத்த முடியாமல் ஏற்படும் பிரச்சினைகள் உறவுகளில் நிறைய சங்கடங்களை கொண்டு வருகின்றன.கொஞ்சம் விழிப்புணர்வு இருந்தால் இதை தவிர்க்க அதிக சிரம்ம் தேவைப்படாது.உறவுகள் எப்போதும் நெருக்கமாகவும்,உதவியாகவும் இருக்கும்.
காதலனை ஆள் வைத்து மிரட்டிய பெண்.
Reviewed by haru
on
September 14, 2011
Rating:
Reviewed by haru
on
September 14, 2011
Rating:





No comments