Ads Below The Title

எய்ட்ஸ்-பாலியல் தொழிலாளி முதல் குடும்பத்துப் பெண் வரை.


கண்ணிவெடியைப்போலத்தான் ஆகிவிட்ட்து.தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது என்று சொல்வார்கள்.கலாச்சாரத்தில் பெருமை கொள்ளும் இந்தியாவின் நிலை பல விஷயத்திற்கு பொருந்தும்.அதில் எய்ட்ஸ் முக்கியமானது.1986 ல் சென்னையில் ஆறு பாலியல் தொழிலாலார்களிடம் முதன்முதலாக எய்ட்ஸ் கண்டறியப்பட்ட்து.
                             நாம் யோசிக்க ஆரம்பித்த்து அதற்குப்பிறகுதான்.ஆனால் உலகம் 1981 ஆம் ஆண்டிலிருந்தே விழித்துக்கொண்ட்து.நம்முடைய கலாச்சாரத்திற்கு எய்ட்ஸ் அச்சுறுத்தலாக இருக்காது என்று பலரும் நினைத்தார்கள்.அப்புறம் உலகம் இந்தியாவை தெரிந்துகொள்ள அதிக காலம் தேவைப்படவில்லை.
                              இப்போது எச்.அய்.வி தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் நிற்கிறது.ஆண்,பெண்,குழந்தைகள் என்று எல்லாமும் இதில் அடக்கம்.துவக்கத்தில் நகர்ப்புறத்திலும்,பாலியல் தொழிலாளர்களிடமும் அதிக பரவல் காணப்பட்ட்து.ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல கிராமப்புறத்திலும்,குடும்ப பெண்களிடமும் தொற்றுக்கள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்ட்து.
                              எச்.அய்.வி. என்பது இந்த மாதிரி ஆட்களிடம்தான் இருக்கும் என்று சுட்டிக்காட்டுவது இன்று சாத்தியமல்ல! துவக்கத்தில் பாலியல் தொழிலாளர்,ஓரினச்சேர்க்கையாளர்கள்,போதை ஊசி பயன்படுத்துவோருக்குதான் இருக்கும் என்று கருதப்பட்ட்து.பிறகு வாகன ஓட்டுனர்கள்,இடப்பெயர்வு போன்றவை கவனத்துக்குள்ளாயின.
                               இவர்களுக்குத்தான் இருக்கும் என்ற அடையாளம் மாறிப்போய்விட்ட்து.2000 த்துக்குப் பிறகு குடும்ப பெண்களும்,அவர்களுடைய குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது புள்ளிவிபரம் சொல்லியது.இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது கணவர்களால் தொற்றை சுமக்கும் அப்பாவிகள்.சிலர் கள்ளக்காதல் பேர்வழிகள்.விதவைகள்,பெற்றோர் இல்லாத அநாதைக்குழந்தைகள் அதிகரித்தார்கள்.நகரங்களைவிட கிராமங்களில் அதிகம் பரவியிருந்த்து.
                              இன்று கண்ணிவெடி போல எல்லா இட்த்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.தமிழ்நாடு அதிக தொற்றுள்ள மாநிலங்களில் ஒன்று.ஒவ்வொரு கிராமத்திலும் ஓரிருவராவது எச்.அய்.வி தொற்றுள்ளவர்களாக இருக்க வாய்ப்புண்டு.ஆனால் அவர்கள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை.தொடுவதாலோ,பழகுவதாலோ ஒட்டிக்கொள்ளாது என்ற போதிலும் ஒதுக்குவதும் கறைப்படுத்துதலும் தொடர்கின்றன.
                               ஆரம்பத்தில் இருந்தே எய்ட்ஸ் உயிர்க்கொல்லி என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றிவிட்ட்து.ஊடகங்களில் எலும்பும் தோலுமாக நோயாளிகள் அச்சுறுத்தினார்கள்.இன்று எச்.அய்.வி கொல்லும் நோயல்ல!(not a killer disease) சர்க்கரை,ரத்த கொதிப்பு போல தொடர் நலக்குறைவுதான்.வாழ்நாள் முழுக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.மற்ற மனிதர்கள் போல இயல்பாக வாழமுடியும்.
                                மக்களின் மனோபாவம் மாறவில்லை.எனக்கு நீரிழிவு நோய் என்று சொல்வதைப்போல எய்ட்ஸ் என்று சொல்லமுடியாது.மோசமான நடவடிக்கை கொண்டவர்களாகவே பார்க்கிறார்கள்.உயிர்க்கொல்லி என்று அஞ்சுகிறார்கள்.ஒதுக்குவது மனித்த் தன்மையற்ற செயல் என்பதோடு நோயைக் கட்டுப்படுத்துவதிலும் பின்னடைவு ஏற்படும்.
                                 இன்று இந்தியா பல்வேறு நிதியுதவிகளுடன் பரிசோதனை,சிகிச்சை,விழிப்புணர்வு போன்றவற்றை செய்து வருகிறது.எத்தனை காலத்துக்கு நிதியுதவி இருக்கும் என்று சொல்லமுடியாது.அவை நிறுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான கோடிகளை இப்பணிகளுக்காக ஒதுக்கவேண்டியிருக்கும்.அந்த சுமை ஒவ்வொரு இந்தியனின் தலை மீதும் ஏறும்.எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு,கட்டுப்பாடு போன்றவற்றில் நம் ஒவ்வொருவருடைய பங்கேற்பும் அவசியம்.
தொடர்புள்ள எனது பதிவு:   
             எய்ட்ஸ் -தெரிந்ததும் தெரியாததும்      
டிசம்பர்-1 உலக எய்ட்ஸ்தினத்திற்கான பதிவு.
எய்ட்ஸ்-பாலியல் தொழிலாளி முதல் குடும்பத்துப் பெண் வரை. எய்ட்ஸ்-பாலியல் தொழிலாளி முதல் குடும்பத்துப் பெண் வரை. Reviewed by haru on November 30, 2011 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]