Ads Below The Title

கள்ளக்காதல் பாலியல் குற்றங்களைத் தூண்டுகிறதா?



தில்லியில் நடந்த வன்புணர்ச்சியின் அதிர்ச்சி அலை இன்னும் ஓய்ந்தபாடில்லை.சமீபகாலமாக செய்திகளில் கவனம் கொண்டிருப்பவர்கள் இவற்றை அறிந்திருக்க முடியும்.பாலியல் குற்றங்களும் கள்ளக்காதலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.கொலைக்கான காரணங்களில் முதலிடம் வகிக்கும் அளவுக்கு கள்ளக்காதல் பெருகியிருக்கிறது.கள்ளக்காதலுக்கான காரணங்களைத்தாண்டி அதன் தாக்கத்தை கவனித்து வந்திருக்கிறேன்.

                               கள்ளக்காதல் போன்றதொரு நிகழ்வை உற்று நோக்கும் வாய்ப்பு கிட்டியது.அலுவலகம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள்.இருவரும் மணமாகி குழந்தைகள் இருந்தார்கள்.வேலையைக்காரணம் காட்டி மற்றவர்கள் வருவதற்கு முன்பே அலுவலகத்தில் இருந்தார்கள்.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.வேலை நேரத்தை தாண்டியும் வெளியேறாமல் கிடந்தார்கள்.நிகழ்ச்சிகளில் புகைப்பட்த்துக்கு ஒன்றாக நின்று கொண்டார்கள்.பல நாட்களில் மதிய உணவு பெண் வீட்டிலிருந்து அவனுக்கு எடுத்துவருவார்.

                                அந்த ஆண் மனநலம் பெற்றவன் என்று சொல்லமுடியாது.அருவருப்பான குணங்களும்,கீழ்த்தரமான செயல்களும் அவனிடம் மிகுந்திருந்தன.கள்ளக்காதலில் அவனுக்கு அனுபவம் எதுவுமில்லை.அதிக உணர்ச்சிவசப்பட்டு சுற்ற ஆரம்பித்தான்.அந்தப்பெண்ணின் நோக்கம் இவனில்லை என்பது வேறு விஷயம்.ஆனால் உடனிருப்பவர்கள் அவர்கள் காதலிப்பதாக பேச ஆரம்பித்தார்கள்.மொத்த ஆண்களும் இறுக்கமாகிக் கிடந்தார்கள்.சிரிக்க மறந்து விட்டார்கள்.இந்தச் செய்தியை உணர்ச்சிப்பெருக்கோடு மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் இறுக்கத்தை தணித்துக்கொண்டார்கள்.அவர்களிடம் என்ன உணர்வை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தியிருக்கும் என்பதை நம்மால் உணரமுடியும்.

                                  சோவியத் யூனியனில் இருந்து வெளியிடப்பட்ட கல்வி உளவியல் புத்தகம் ஒன்றில் படித்த விஷயம் இது. கல்லூரிகளில் ஒரு வகுப்பில் பெரும்பாலானவர்கள் காதலில் இருப்பவர்களாக இருக்கலாம்.இன்னொரு வகுப்பில் யாரும் காதலிக்காமல் இருக்கலாம்.தொற்றிக்கொள்ளும் விஷயம் இது.காதலை விடவும் கள்ளக்காதல் சிக்கலான பிரச்சினையை தோற்றுவிக்கிறது.சுயமதிப்பை உடைத்து அங்கீகாரத்தை வேண்டும் தீவிர உணர்வை வேண்டுகிறது.இருவரைப்பற்றிய கற்பனைகள் மன இறுக்கத்தையும் தொடர்ந்து பாலுணர்வையும் தூண்டக்கூடும்.இணையத்தின் பாலியல் படங்களைவிடவும் இது போன்ற நிகழ்வுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

                                    ஒரு வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சண்டை.மனைவிக்கு அடி விழுந்து காயம் ஆகிவிட்ட்து.மனைவி திருப்பி கணவனை அடிக்கவில்லை.மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குவந்த மகனை ஓங்கி அறைந்தார்.கணவன் மீதான ஆத்திரத்தை குழந்தையை அடித்து தீர்த்துக்கொண்டார்.மனத்தில் ஏற்படும் தீவிர உணர்வை ஏதோவொரு இட்த்தில் இறக்கிவைத்துத்தான் ஆகவேண்டும்.வெளிப்ப்டையான கள்ளக்காதல் போன்ற நிகழ்வுகளால் தூண்டப்பட்டு பாலியல் குற்றவாளியாக மாறுவது சாத்தியம்தான்.மேற்குறிப்பிட்ட அலுவலகத்தில் இன்னொரு பணியாளர் மீது குற்றம் சாட்டினார்கள்.பெண் வாடிக்கையாளர்களிடம் தவறாக நடந்து கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இது அலுவலகத்தில் ஏற்படுத்திய கள்ளக்காதல் நிகழ்வின் தாக்கமாக இருக்கமுடியும்.

                               ஒரு கிராமத்திற்கு ஓரிருவர் இப்படி இருப்பது சாத்தியம்தான்.மேலும் கள்ளக்காதல் எப்போதும் ரகசியமான ஒன்றல்ல! சுட்டியை அழுத்தி படிக்கவும்: கள்ளக்காதல் வெளியேவருவது எப்படி?.பெண் போகப்பொருளாக மட்டுமே கருதும் சமூகத்தில் மணம் தாண்டிய உறவுகள் ஆணிடம் மிக மோசமான பிம்பத்தை ஏற்படுத்துகிறது.அதிக ஆண்கள் பெண்ணின் மீது ஆத்திரத்தைக் கொண்டிருக்கிறார்கள்.சில நடிகர்கள் பெண்களை மோசமாக விமர்சிக்கும்போது திரையரங்கில் பலத்த கரவொலியை நீங்கள் கேட்க முடியும்.ஒரு பெண்ணின் மீதான ஆத்திரம் இன்னொரு பெண்ணின் மீது திரும்பும் சாத்தியம் உண்டு.

கள்ளக்காதல் பாலியல் குற்றங்களைத் தூண்டுகிறதா? கள்ளக்காதல் பாலியல் குற்றங்களைத் தூண்டுகிறதா? Reviewed by haru on June 10, 2013 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]